பிஎன்பி பாரிபாஸ் ஓபன் இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வி அடைந்தார்.
பிஎன்பி பாரிபாஸ் ஓபன் இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிப்போட்டி கலிஃபோா்னியாவின் இண்டியன்வெல்ஸ் நகரில் ஞாயிறு நள்ளிரவு நடைபெற்றது. இதில் ஜாம்பவான் ரபேல் நடால்-அமெரிக்க வீரா் டெய்லா் ப்ரிட்ஸ் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நடாலை 6-3, 7-6 என்ற நேர்செட்களில் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்க வீரர் டெய்லா் ப்ரிட்ஸ். அமெரிக்க வீரர் டெய்லா் ப்ரிட்ஸ், டென்னிஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் 20ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.