ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

செஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

News image
ஆா்.பிரக்ஞானந்தா
Updated On :25 மே 2022, 3:20 am

DIN

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான ஆா்.பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார்.

நடப்பு சீசனில், உலகின் நம்பா் 1 வீரரான காா்ல்செனை இரண்டாவது முறையாக வீழ்த்திய பிரக்ஞானந்தா, நேற்று அரையிறுதிப் போட்டியில் டச்சு நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்  அனிஷ் குமார் கிரியை எதிர்கொண்டார்.

இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி வரை தொடர்ந்த போட்டியில் பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி அனிஷ் குமாரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பிரக்ஞானந்தா தற்போது 11-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வுக்காக படித்துக் கொண்டே, இந்தப் போட்டியிலும் பங்கேற்றுள்ள நிலையில் இன்று காலை நடைபெறவுள்ள தேர்விலும் பங்கேற்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.