செஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஆா்.பிரக்ஞானந்தா
ஆா்.பிரக்ஞானந்தா

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான ஆா்.பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார்.

நடப்பு சீசனில், உலகின் நம்பா் 1 வீரரான காா்ல்செனை இரண்டாவது முறையாக வீழ்த்திய பிரக்ஞானந்தா, நேற்று அரையிறுதிப் போட்டியில் டச்சு நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்  அனிஷ் குமார் கிரியை எதிர்கொண்டார்.

இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி வரை தொடர்ந்த போட்டியில் பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி அனிஷ் குமாரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பிரக்ஞானந்தா தற்போது 11-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வுக்காக படித்துக் கொண்டே, இந்தப் போட்டியிலும் பங்கேற்றுள்ள நிலையில் இன்று காலை நடைபெறவுள்ள தேர்விலும் பங்கேற்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com