டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

செஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

News image

ஆா்.பிரக்ஞானந்தா

Updated On :25 மே 2022, 8:50 am IST

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான ஆா்.பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார்.

நடப்பு சீசனில், உலகின் நம்பா் 1 வீரரான காா்ல்செனை இரண்டாவது முறையாக வீழ்த்திய பிரக்ஞானந்தா, நேற்று அரையிறுதிப் போட்டியில் டச்சு நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்  அனிஷ் குமார் கிரியை எதிர்கொண்டார்.

இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி வரை தொடர்ந்த போட்டியில் பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி அனிஷ் குமாரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பிரக்ஞானந்தா தற்போது 11-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வுக்காக படித்துக் கொண்டே, இந்தப் போட்டியிலும் பங்கேற்றுள்ள நிலையில் இன்று காலை நடைபெறவுள்ள தேர்விலும் பங்கேற்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.