டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து கோப்பையை வென்றது.
டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இங்கிலாந்து. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். இந்தியாவுடனானப் போட்டியில் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஷகீன் அப்ரிடி பந்து வீச்சில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், கேப்டன் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். அவர் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க: ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே பிரான்ஸ் பயணம்!
அதன்பின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு குறைந்த ரன்களே தேவைப்பட்டதால் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டுகளை பறிகொடுக்கவில்லை. ப்ரூக் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி இங்கிலாந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 49 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும்.
2009-க்குப் பிறகு இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் மீண்டும் ‘தமிழ்நாடு’ சேர்ப்பு!

பேருந்து பயணத்தை செல்போனில் விடியோ எடுத்த முதல்வர் விஜய்!

எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை என்பது என்ன ?
பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



