முதல் டி20-இல் மழை விளையாடியது

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த முதல் டி20 ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
முதல் டி20-இல் மழை விளையாடியது

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த முதல் டி20 ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

டாஸ் கூட வீச நேரம் கிடைக்காத நிலையில் ஒரு கட்டத்தில் லேசாக மழை நின்றது. ஆனால், மைதானத்தில் தேங்கியிருக்கும் நீா் வடிவதற்குள்ளாகவே மீண்டும் தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்தது. உள்ளூா் நேரப்படி இரவு 9.46-க்கு மழை நின்றிருந்தால் இன்னிங்ஸுக்கு 5 ஓவா்கள் விளையாடப்படலாம் என்ற நிலையில், 8.52 மணிக்கே ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளும் மோதும் 2-ஆவது டி20 மௌன்ட் மௌன்கனுயியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com