கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பாகிஸ்தானில் 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடும் நியூசிலாந்து!

19 வருடங்களாக பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யாத நியூசிலாந்து அணி ஐந்து மாத இடைவெளியில்...

Published On :

19 வருடங்களாக பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யாத நியூசிலாந்து அணி ஐந்து மாத இடைவெளியில் இருமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.

இந்த வருட டிசம்பர் இறுதியிலும் ஜனவரி தொடக்கத்திலும் பாகிஸ்தானில் இரு டெஸ்டுகளிலும் அதே ஜனவரியில் 3 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது நியூசிலாந்து அணி. பிறகு ஐபிஎல் நடைபெறும் ஏப்ரல், மே மாதங்களில் பாகிஸ்தானுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. செப்டம்பர் 2021-ல் பாகிஸ்தானில் வெள்ளைப் பந்து தொடரை ரத்து செய்த காரணத்தால் அதை ஈடு கட்டும் விதமாக ஏப்ரல், மே மாதங்களில் மீண்டும் சுற்றுப்பயணம் செய்கிறது. 

கடைசியாக 2003 நவம்பரில் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்தது நியூசிலாந்து. 

நியூசிலாந்தின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

கராச்சியில் இரு டெஸ்டுகள்

முதல் டெஸ்ட், டிசம்பர் 27-31
2-வது டெஸ்ட், ஜனவரி 4-8

ஒருநாள் தொடர்

கராச்சியில் மூன்று ஒருநாள் ஆட்டங்கள்

2023 ஜனவரி 11, 13, 15.

டி20 தொடர்

கராச்சியில் 4 டி20 ஆட்டங்கள். ஏப்ரல் 13, 15, 16, 19.

லாகூரில் 5-வது டி20 ஆட்டம். ஏப்ரல் 23.

ஒருநாள் தொடர்

லாகூரில் முதல் இரு ஆட்டங்கள். ஏப்ரல் 26, 28. 

ராவல்பிண்டியில் கடைசி மூன்று ஆட்டங்கள். மே 1, 4, 7.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.