தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஓவர்களை விரைவாக வீசி முடிக்க ஆஸி. அணி மேற்கொள்ளும் புதிய உத்தி!

இந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்க புதிய உத்தியைக் கையாண்டு வருகிறார்கள் ஆஸி. வீரர்கள்.

News image
Updated On :19 அக்டோபர் 2022, 11:02 am IST

டி20 கிரிக்கெட்டில் குறிப்பிட நேரத்துக்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லையென்றால் ஐசிசி அதற்கு ஒரு தண்டனை வழங்குகிறது.

அதாவது குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு (85 நிமிடங்கள்) வீசப்படும் ஓவர்களில் வட்டத்துக்குள் ஐந்து ஃபீல்டர்கள் நிற்க வேண்டும். இதனால் வட்டத்துக்கு வெளியே நான்கு ஃபீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும். இதனால் எதிரணி பேட்டர்களால் அதிக ரன்கள் எடுக்க முடியும்.

இந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்க புதிய உத்தியைக் கையாண்டு வருகிறார்கள் ஆஸி. வீரர்கள்.

அதன்படி பவுண்டரிக்குச் செல்லும் பந்துகளை எடுத்துத் தர எல்லைக்கோட்டுக்கு அருகே தங்களுடைய மாற்று வீரர்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் மைதானத்தில் உள்ள ஒரு வீரர் பவுண்டரிக்குச் சென்ற பந்தை எடுப்பதற்காக ஓடிச்செல்லத் தேவையில்லை. நேரத்தையும் வீணாக்கத் தேவையில்லை. எல்லைக்கோட்டுக்கு வெளியே நிற்கும் வீரர்கள், அந்தப் பந்தை உடனடியாக எடுத்துத் தந்துவிடுவார்கள். இதனால் நேரமும் ஓரளவு மிச்சமாகும், வீரர்களும் பந்தை எடுப்பதற்காக ஓடிச் சென்று சோர்வடைய வேண்டாம். முக்கியமாக பவர்பிளே ஓவர்களில் இந்த உத்தி பெரிதும் கைகொடுக்கும். ஒவ்வொருமுறையும் 10 நொடிகளைச் சேமித்தாலே கடைசியில் அது ஓவர்களை முடிக்கும்போது பெரிய அளவில் உதவும்.  

ஆஸ்திரேலியாவின் இந்தப் புதிய உத்தி பற்றிய காணொளியை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.