ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.
இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக மோத இருந்தன. இரு அணிகளும் இதற்கு முன்பு மோதிய ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் அதிக முறை வென்றுள்ளது. எனினும் சமீபத்தில் விளையாடிய டி20 தொடரில் 3-2 என அயர்லாந்து வென்றது.
இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற இருந்த ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது. டாஸ் நிகழ்வுக்குக் கூட வாய்ப்பில்லாமல் கைவிடப்பட்டதால் இரு அணி வீரர்களும் ஏமாற்றமடைந்தார்கள். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் கடைசி இரு ஆட்டங்கள் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளன.
3 ஆட்டங்களில் விளையாடி 3 புள்ளிகளுடன் குரூப் 1 புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது அயர்லாந்து. 2 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலக சாம்பினை வீழ்த்தி சாத்விக் -சிராக் அசத்தல்: இறுதிக்கு தகுதி!

நாகா்கோவில் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் பலி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,138 கோடி டாலராக குறைவு!

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும்! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



