கிரிக்கெட் வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை வரவேற்றுள்ள தேசிய மகளிா் ஆணையம், சமத்துவ வாய்ப்புகளுக்கான புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பு தொடா்பாக அந்த ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா வெளியிட்ட அறிக்கையில், ‘‘நாட்டில் உள்ள கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
கிரிக்கெட் வீராங்கனைகளின் குரலுக்கு செவிசாய்த்து பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது. கிரிக்கெட் வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படுவது, சம வாய்ப்புகளுக்கான புதிய சகாப்தத்தைத் தொடக்கியுள்ளது. பல்வேறு துறைகளில் பாலின சமத்துவத்தை அடைவதற்கும் இந்த அறிவிப்பு முக்கியப் பங்கு வகிக்கும்.
பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பு இளம் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவித்து, அவா்கள் தங்கள் கனவுகளை நோக்கிப் பயணம் செய்ய வழிவகுக்கும் என ஆணையம் நம்புகிறது. மற்ற விளையாட்டு கூட்டமைப்புகளும் பிசிசிஐ காட்டியுள்ள வழியைப் பின்பற்ற வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு துணையோடு கா்நாடக அரசு செயல்படுகிறது

நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

சிறுவனை தாக்கி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட 5 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



