டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

யு.எஸ். ஓபன்: நடாலை வீழ்த்திய டியாஃபோ அரையிறுதிக்குத் தகுதி

யு. எஸ். ஓபன் போட்டியில் 4-வது சுற்றில் பிரபல வீரர் நடாலை வீழ்த்திய அமெரிக்க வீரரான டியாஃபோ அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 12:34 pm IST

யு. எஸ். ஓபன் போட்டியில் 4-வது சுற்றில் பிரபல வீரர் நடாலை வீழ்த்திய அமெரிக்க வீரரான டியாஃபோ அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

24 வயது ஃபிரான்சஸ் டியாஃபோ நடாலை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்தார். 2005-க்குப் பிறகு காலிறுதியில் நடால், ஃபெடரர், ஜோகோவிச் இல்லாமல் நடைபெறும் 2-வது யு.எஸ். ஓபன் போட்டி இது. 2020 போட்டியிலும் இதுபோல இம்மூவரும் காலிறுதியில் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் காலிறுதிச் சுற்றில் ஆண்ட்ரே ருப்லேவை 7-6 (3), 7-6 (0), 6-4  என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் டியாஃபோ. இதன்மூலம் யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2006-க்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 2006-ல் அமெரிக்காவின் ஆண்டி ரோடிக் அரையிறுதில் ஃபெடரரிடம் தோற்றார். மேலும் ஆடவர் பிரிவில் கடைசியாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அமெரிக்க வீரரும் ஆண்டி ரோடிக் தான். 2003-ல் யு.எஸ். ஓபன் பட்டம் வென்றார். அதன்பிறகு நடைபெற்ற 74 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் எந்தவொரு அமெரிக்க வீரரும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.