உலக இளையோர் செஸ் போட்டிகளில் இரு இந்திய வீரர்கள் சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்கள்.
இந்தியாவின் 76-வது செஸ் கிராண்ட்மாஸ்டரான 15 வயது பிரணவ் ஆனந்த், உலக யு-16 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த பிரணவ் ஆனந்த், வேர்ல்ட் யூத் 2022 போட்டியில் 11 ஆட்டங்களில் 9 புள்ளிகளை எடுத்தார். அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது இளம்பரிதி யு-14 உலக சாம்பியன் ஆகியுள்ளார். 11 ஆட்டங்களில் 9.5 புள்ளிகளை அவர் எடுத்து வெற்றி பெற்றார். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளம்பரிதிக்குப் பிரபல செஸ் வீரர் அனிஷ் கிரி, ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளார்.
Congratulations Ilamparthi A R...World Under-14 Champion!!@DrSK_AICF @Bharatchess64 @IndiaSports@Media_SAI @ianuragthakur @PMOIndia @rashtrapatibhvn pic.twitter.com/4QQ9vnQNeR
â All India Chess Federation (@aicfchess) September 17, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உதயநிதி கைது - நேரலை!

கைதாகிறாரா உதயநிதி? பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் முயற்சி: ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு
உதயநிதி கைது? சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



