ஜூனியர் உலக சாம்பியன் ஆன தமிழகத்தின் 12 வயது இளம்பரிதி

11 ஆட்டங்களில் 9.5 புள்ளிகளை அவர் எடுத்து வெற்றி பெற்றார்.
ஜூனியர் உலக சாம்பியன் ஆன தமிழகத்தின் 12 வயது இளம்பரிதி

உலக இளையோர் செஸ் போட்டிகளில் இரு இந்திய வீரர்கள் சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்கள்.

இந்தியாவின் 76-வது செஸ் கிராண்ட்மாஸ்டரான 15 வயது பிரணவ் ஆனந்த், உலக யு-16 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த பிரணவ் ஆனந்த், வேர்ல்ட் யூத் 2022 போட்டியில் 11 ஆட்டங்களில் 9 புள்ளிகளை எடுத்தார். அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது இளம்பரிதி யு-14 உலக சாம்பியன் ஆகியுள்ளார். 11 ஆட்டங்களில் 9.5 புள்ளிகளை அவர் எடுத்து வெற்றி பெற்றார். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளம்பரிதிக்குப் பிரபல செஸ் வீரர் அனிஷ் கிரி, ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com