குஜராத் டைட்டன்ஸ் அணி பதிவிட்ட ட்வீட்டால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் அணியிலிருந்து விடைபெறுகிறா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கின. அதில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒன்று. அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார். ஐபிஎல் சீசனின் ஆரம்பம் முதலே குஜராத் அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் கோப்பையையும் கைப்பற்றியது. அறிமுக சீசனிலேயே அந்த அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மன் கில் விளையாடி வந்தார். இந்நிலையில், இன்று குஜாரத் டைட்டன்ஸ் அணி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவு ஒன்று ஷுப்மன் கில் அடுத்து வரும் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
Itâs been a journey to remember. We wish you all the best for your next endeavour, @ShubmanGill!#AavaDe
â Gujarat Titans (@gujarat_titans) September 17, 2022
அந்தப் பதிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் கூறியிருப்பதாவது: “ நீங்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பயணித்தது நினைத்துப் பார்ப்பதற்கு சிறப்பான தருணம். உங்களது அடுத்த பயணத்திற்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.” எனப் பதிவிட்டுள்ளது.
இருப்பினும், ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து விலகுகிறாரா என்பது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோழவந்தான் அருகே தொழிலாளி வெட்டிக் கொலை
சா்வதேச பாதுகாப்புச் சூழல்: பிரதமா் தலைமையில் அமைச்சரவைக் குழு ஆலோசனை

சீமைக் கருவேல மரங்களை அகற்றி நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்யக் கோரி மனு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: தொல். திருமாவளவன்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


