சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி ஒற்றையா் பிரிவில் செக். குடியரசைச் சோ்ந்த 17 வயது இளம் வீராங்கனை லிண்டா ஃபுருவிா்டோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
தமிழக அரசு, டிஎன்டிஏ, டபிள்யுடிஏ இணைந்து நடத்திய இப்போட்டியின் இறுதிச்சுற்று நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் 4-6, 6-3, 6-4 என வெற்றி பெற்றார் லிண்டா.
லிண்டா ஃபுருவிா்டோவா வென்ற முதல் டபிள்யுடிஏ சாம்பியன் பட்டம் சென்னை ஓபன் ஆகும். முதல்வா் மு.க. ஸ்டாலின் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கோப்பையை வழங்கினாா். சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு ரூ. 26 லட்சமும், 2-வது இடம் பெற்ற மகதா லினேட்டுக்கு ரூ.15.7 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன. சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா, தரவரிசையில் 74-வது இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் தரவரிசையில் இடம்பெற்றுள்ள முதல் 100 வீராங்கனைகளில் குறைந்த வயது கொண்ட வீராங்கனை என்கிற பெருமையை லிண்டா அடைந்துள்ளார்.










Related Article
நாங்கள் விளையாட்டு வீரர்கள், ரோபோட்கள் அல்ல: பிரபல வீராங்கனை சாடல்
சர்வதேச செஸ் போட்டி: மூன்று பிரபல வீரர்களைத் தோற்கடித்த பிரக்ஞானந்தா!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிரபல வங்கதேச வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடை
உமேஷ் யாதவுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பது ஏன்?: ரோஹித் சர்மா பதில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










