மகளிர் ஆசியக் கோப்பை டி-20: இந்திய அணி அறிவிப்பு

வங்கதேசத்தில் அக்டோபர் 1 முதல் 15 வரை நடைபெறும் மகளிர் ஆசியக் கோப்பை டி-20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.
ஹர்மன்பிரீத் கௌர் (கோப்புப் படம்)
ஹர்மன்பிரீத் கௌர் (கோப்புப் படம்)

வங்கதேசத்தில் அக்டோபர் 1 முதல் 15 வரை நடைபெறும் மகளிர் ஆசியக் கோப்பை டி-20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.

ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணியில் ஷெஃபாலி வெர்மா, ரிச்சா கோஷ், ஸ்நே ராணா, தயாளன் ஹேமலதா, மேக்னா சிங், ரேணுகா தாக்குர், ராதா யாதவ், கே.பி.நவ்கீர் உள்ளிட்ட வீராங்கனைகள் முதன்முறையாக ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாடுகின்றனர்.

தானியா பைடா, சிம்ரன் தில் பகதூர் ஆகியோர் தயார் நிலை வீராங்கனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை ஆகிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அறிவித்தார். 

ஆசியக் கோப்பை டி-20 போட்டிகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com