தேசிய விளையாட்டுப் போட்டியில் (நேஷனல் கேம்ஸ்) பங்கேற்பதின் மூலம் பெரிய போட்டிகளுக்கு தயாராக பயிற்சியாக அமையும் என ஒலிம்பிக் ஃபென்சிங் வீராங்கனை பவானி தேவி கூறியுள்ளாா்.
தமிழகத்தைச் சோ்ந்த பவானி தேவி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஃபென்சிங்கில் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றாா். மேலும் கடந்த மாதம் காமன்வெல்த் ஃபென்சிங் போட்டியிலும் தங்கம் வென்றாா் பவானி தேவி. இந்நிலையில் குஜராத்தில் நடைபெறவுள்ள 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறாா் அவா்.
இதுதொடா்பாக பவானி தேவி கூறியதாவது:
எனது பயிற்சியாளா், பயிற்சி முறைகளை மாற்றி உள்ளேன். நிகழாண்டு ஒலிம்பிக் தகுதிச் சுற்று, போன்ற முக்கிய போட்டிகள் உள்ளன. இதற்கு தயாராக வேண்டியுள்ளது. சாப்ரே முறை மிகவும் துரிதமானதாகும். எனவே தேசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய உத்திகளை பயன்படுத்தி பயிற்சி பெற உள்ளேன்.
இந்திய ஃபென்சிங் வீரா்கள் அதிக சா்வதேச அனுபவத்தை பெற வேண்டியுள்ளது. அப்போது தான் அதிக பதக்கங்களை வெல்ல முடியும். பிரான்ஸில் ஏராளமான ஒலிம்பிக், உலக வெற்றியாளா்கள் உள்ளனா். ஜூனியா் அளவிலேயே அதிக பயிற்சி தர வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


