இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி அறிவிப்பு: மீண்டும் ரஹானே!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:22 am IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

லண்டனிலுள்ள தி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வருகின்ற ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகின்றது.

இந்தப் போட்டியில் டெஸ்ட் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா மற்றும் பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் விலகியதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்நிலையில், இறுதிப் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மா(கேப்டன்), கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கேஎல் ராகுல், கே.எஸ்.பரத்(விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல், சர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் உனத்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.