இந்த உலகக் கோப்பையை வெல்ல எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது: ரோஹித் சர்மா

இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிக அளவு ஆதரவு இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையை வெல்ல எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது: ரோஹித் சர்மா
Published on
Updated on
1 min read

இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிக அளவு ஆதரவு இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

50 ஓவர் உலகக் கோப்பை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி இந்தியாவில் 10 முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிக அளவு ஆதரவு இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதை நான் அருகிலிருந்து பார்த்ததே இல்லை. இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போதும் நான் அணியில் விளையாடவில்லை. ஆனால், அது மிகவும் அழகான தருணம். உலகக் கோப்பை வெல்வதன் பின்னணியில் நிறைய நினைவுகள் இருக்கிறது. இந்தியாவில் நாங்கள் பயணிக்கும் ஒவ்வொரு மைதானத்திலும் எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என்பது எங்களுக்கு நிச்சயமாக தெரியும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக  இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. நாங்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடி இருந்தோம். ஆனால், கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன்னதாக 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடியது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உள்ளது என்றார்.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com