காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
இதையும் படிக்க: துபையில் டென்னிஸ் விளையாடிய தோனி - பந்த்!
இந்த நிலையில், காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்திய பூஜா, ஸ்னேஹா
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது பந்தை கேட்ச் பிடிக்க முயற்சித்த ருதுராஜுக்கு விரலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.