பிருத்வி ஷாவைத் தாக்கிய சம்பவம்: நடிகை கைது!

கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவைத் தாக்கிய சம்பவத்தில் நடிகை சப்னா கைது செய்யப்பட்டுள்ளார்.
பிருத்வி ஷாவைத் தாக்கிய சம்பவம்: நடிகை கைது!

கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவைத் தாக்கிய சம்பவத்தில் நடிகை சப்னா கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை சாண்டா குரூஸ் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் 2-வது தடவையாக செல்பி எடுக்க சம்மதிக்காத காரணத்தால் பிரபல கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவை போஜ்பூரி நடிகை சப்னா கில் தாக்கினார். இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது. மேலும் பிருத்வி ஷாவின் நண்பரின் காரின் இச்சம்பவத்தில் தாக்கப்பட்டது. காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் மீது மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. சண்டிகரைச் சேர்ந்த சப்னா தற்போது மும்பையில் வசிக்கிறார். 

பிருத்வி ஷாவைத் தாக்கிய சம்பவத்தில் நடிகை சப்னா கில் மும்பையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com