நியூசி. ஒருநாள் தொடர்: ஷ்ரேயஸ் ஐயர் விலகல்

ஒருநாள் தொடர், நாளை முதல் (ஜனவரி 18) தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
நியூசி. ஒருநாள் தொடர்: ஷ்ரேயஸ் ஐயர் விலகல்
Published on
Updated on
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பிரபல வீரர் ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது. இதற்கு அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர், நாளை முதல் (ஜனவரி 18) தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்திய ஒருநாள் அணியின் முக்கிய பேட்டர்களில் ஒருவரான ஷ்ரேயஸ் ஐயர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய ஒருநாள் அணியில் ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தகவலை பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 28, 28, 38 என ஓரளவு சுமாராகவே விளையாடினார் ஷ்ரேயஸ் ஐயர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com