முதல் ஒருநாள்: இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஓவர்கள் வீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி.


நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஓவர்கள் வீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
நியூசிலாந்து அணியை முதல் ஒருநாள் ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. 149 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் எடுத்தார் தொடக்க வீரர் ஷுப்மன் கில். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த இளம் வீரர் (23 வயது) என்கிற சாதனையைப் படைத்தார். இரட்டைச் சதம் எடுத்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையையும் அடைந்தார் கில்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. 50 ஓவர்களை வீசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் 3 ஓவர்கள் குறைவாக வீசியதால் இந்திய அணி வீரர்களின் ஆட்ட ஊதியத்தில் 60% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு ஓவர் குறைவாக வீசினாலே 20% அபராதம் விதிக்கப்படும்.
நாளை (ஜனவரி 21), ராய்பூரில் 2-வது ஒருநாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...