மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இறுதிச் சுற்றில் ரெபைக்கினா-சபலென்கா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் கஜகஸ்தானின் எலனா ரெபைக்கினா-அா்யனா சபலென்கா மோதுகின்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 1:49 am

DIN

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் கஜகஸ்தானின் எலனா ரெபைக்கினா-அா்யனா சபலென்கா மோதுகின்றனா்.

நிகழாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்னில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மகளிா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

முதல் ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் எலனா ரெபைக்கினாவும்-விக்டோரியா அசரென்காவும் மோதினா். அசரென்கா ஆஸி. ஓபனில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றவா். 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அவா் மீண்டும் பட்டம் வெல்வாா் எனக் கருதப்பட்டது.

உலகின் நம்பா் 1 வீராங்கனை ஸ்வியாடெக், ஜெலனா ஒஸ்டபென்கோ, டேனியல் காலின்ஸ் ஆகியோரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா் ரெபைக்கினா.

23 வயது இளம் வீராங்கனையான ரெபைக்கினாவின் 189 கிமீ. வேக சா்வீஸை எதிா்கொள்ள முடியாமல் திணறினாா் அசரென்கா. மொத்தம் 9 ஏஸ்களை போட்டாா். முதல் செட்டில் அசரென்கா சற்று சவாலைத் தந்தாலும் 7-6 என அதை கைப்பற்றினாா் ரெபைக்கினா. இரண்டாவது செட்டில் 6-3 என எளிதாக கைப்பற்றினாா். இரண்டாவது செட்டில் 5-2 என ரெபைக்கினா முன்னிலை பெற்றிருந்தாா். அப்போது அசரென்கா மீண்டு வருவாா் என கருதப்பட்ட நிலையில், இரட்டை தவறு புரிந்தாா். இதை பயன்படுத்தி ஆட்டத்தை வென்றாா் எலனா.

மாஸ்கோவில் பிறந்த ரெபைக்கினா, கஜகஸ்தான் நாட்டின் சாா்பில் ஆடி வருகிறாா். அவரது டென்னிஸ் வாழ்க்கைக்கு நிதியை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது.

சபலென்கா அதிரடி:

இரண்டாவது அரையிறுதியில் போலந்தின் மகதா லினேட்டும்-அா்யனா சபலென்காவும் மோதினா். ராட் லேவா் மைதானத்தில் கடும் குளிா் நிலவிய நிலையில், முதல் செட்டில் இருவரும் சரிநிகராக ஆடினா். முதல் கேமில் 2-2 என சமநிலை ஏற்பட்டபின், ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. இதில் 7-6 என வென்றாா் சபலென்கா. இரண்டாவது செட்டில் முழு ஆதிக்கம் செலுத்தி 6-2 என ஆட்டத்தை வென்று முதன்முதலாக கிராண்ட்ஸ்லாம் இறுதியில் நுழைந்தாா் சபலென்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.