செய்திகள்
மஞ்சள் நிற ஜெர்ஸியில் வந்து விடாதீர்கள்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.8ஆம் நாள் சென்னையில் நடைபெற உள்ளது.
மொத்தம் 10 அணிகள் 48 ஆட்டங்களில் ஆடுகின்றன. கடந்த 2011-இல் மும்பையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கடைசியாக இந்தியா பட்டம் வென்றிருந்தது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.8ஆம் நாள் சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னை ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு தீவிரமான ரசிகர்கள். இந்தியாவில் எங்கு போட்டி நடந்தாலும் சென்று விடுவார்கள். 2023 கோப்பையை தோனி தலைமையில் சிஎஸ்கே வென்றது.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தினேஷ் கார்த்திக், “சிஎஸ்கே அணியும் மஞ்சள் ஜெர்ஸிதான். ஆஸ்திரேலியா அணியும் மஞ்சள் ஜெர்ஸிதான். அதனால் சென்னையில் நடக்கவுள்ள இந்தியா- ஆஸி. ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு மஞ்சள் ஜெர்ஸியுடன் வந்து விடாதீர்கள். நம்ம நீல நிற ஜெர்ஸியுடன் வாருங்கள்” என ஜாலியாக கூறியுள்ளார்.