ஹேஸில்வுட் வேண்டுதல் பலித்தது: மழையால் ஆஷஸ் போட்டி தாமதம்! 

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 4வது ஆஷஸ் போட்டியின் 4வது நாளில் மழை பெய்து வருவதால் போட்டி இன்னும் தொடங்கவில்லை. 
படம்: ட்விட்டர் | ஈசிபி
படம்: ட்விட்டர் | ஈசிபி
Published on
Updated on
1 min read

முதல் இன்னிங்ஸில் ஆஸி-317 ரன்களும் இங்கிலாந்து - 592 ரன்களும் எடுத்துள்ளது. ஆஸி. அணி 2ஆம் இன்னிங்ஸில் 113/4 ரன்கள் எடுத்துள்ளது. 

லபுஷேன் 44 ரன்களும் மிட்செல் மார்ஷ் 1 ரன்னுடம் களத்தில் இருக்கிறார்கள். மீதமிருக்கும் இரண்டு நாள்களில் ஆஸி. அணி விக்கெட் விடாமல் இருந்தால் மட்டுமே ஆட்டத்தினை டிரா செய்ய முடியும். வெல்ல வேண்டுமானால் அதிரடியான் ஆட்டத்தினை விளையாட வேண்டும். அடுத்து இங்கிலாந்தையும் ஆல் அவுட் செய்ய வேண்டும். இது மிகவும் கடினாமான ஒன்றாகும். எனவே மழை குறுக்கிட்டால் ஆஸி. அணிக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆஸி.2-1 என முன்னிலையில் இருக்கிறது. 

பிரபல ஆஸி. வேகப் பந்து வீச்சாளர் ஹேஸில்வுட் மழை வர வேண்டி பிரார்த்தனை செய்தால் மகிழ்ச்சி என பேட்டியில் கூறியிருந்தார். அவர் வேண்டுதல் வீண் போகவில்லை. பலித்துவிட்டது. இங்கிலாந்தில் மழை. 

மழை இன்னும் நிற்கவில்லை. போட்டி துவங்க தாமதமாகுமென இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.  

ஆஸி. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அதே சமயம் இங்கிலாந்து வீரர்கள் சோகத்திலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பரவிவருகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com