பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் எதிரான ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் கடைசி ஐபிஎல் லீக் ஆட்டம் இன்று மாலை 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் ஆர்சிபி அணி வென்றால் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்த அணி வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.
இதையும் படிக்க: சிஎஸ்கே அணியின் வாகனத்தை சூழ்ந்த ரசிகர்கள்: வைரல் விடியோ
இந்நிலையில், மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால் பெங்களூருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையேயான ஆட்டம் துவங்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆட்டம் தடைபட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.