ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டிக்கான டாஸ் வீசுவது மழையின் காரணத்தால் தாமதமாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று குவாலிஃபையர் 2 போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியானது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டி நடைபெறும் மைதானத்தில் தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்படுள்ளது.