ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அபார பந்துவீச்சு: ஷமிக்கு முத்தமளித்த அஸ்வின்!

நியூசிலாந்து எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

News image
Updated On :16 நவம்பர் 2023, 8:09 am

DIN

உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று (நவ.15) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.  50 ஓவர் முடிவில் இந்தியா 397 ரன்களைக் குவித்தது. கோலி 117, ஸ்ரேயாஷ் ஐயர் 105, ஷுப்மன் கில் 80  ரன்கள் எடுத்து அசத்தினார்கள். 

அடுத்து ஆடிய நியூசி. அணி போராடி தோற்றது. 48.5 ஓவர்களில் நியூசி. அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

தொடக்க வீரர்ரகளான கான்வே, ரச்சின் ரவீந்திரா தலா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டேரில் மிட்செல் அதிரடியாக இறுதி வரை போராடி 134 ரன்களில் ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 69, பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.   

இந்தியா சார்பாக முகமது ஷமி 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். சிராஜ், பும்ரா, குல்தீப் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முகமது ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

இந்த ஆட்டத்தின் போக்கையே தன் பந்துவீச்சால் மாற்றிய ஷமிக்கு இந்திய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஷமியின் கையில் முத்தம் கொடுத்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story image

காரணம், அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தமிழக வீரர் அஸ்வினை அணியில் சேர்த்து 6 பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சேர்க்கப்படவில்லை.

மேலும், இந்த உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதி உள்பட 10 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணியில், ஒரு போட்டியில் கூட அஸ்வின் களமிறங்கவில்லை. இருப்பினும், சக பந்துவீச்சாளரின் திறமையை முத்தம் கொடுத்து பாராட்டிய அஸ்வின் டீமில் இல்லையென்றாலும் டிரெண்டிங்கில் இருக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.