இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணியின் பந்துவீச்சு காரணமில்லை என நினைக்கிறேன். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கிட்டத்தட்ட ஈரமான பந்தில்தான் பந்துவீசினார்கள். அந்த சூழலில் பந்துவீசுவது மிகவும் கடினம். இது போன்ற சூழலில் ஓவருக்கு 12,13 அல்லது 14 ரன்களைக் கூட எடுக்கலாம். முதல் டி20 போட்டியில் நாங்கள் 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை துரத்திப் பிடித்தோம். அதனால், பந்துவீச்சு என்பது தோல்விக்கு காரணமென்று நான் நினைக்கவில்லை. மைதானத்தில் உள்ள பனிப்பொழிவு அவர்கள் சிறப்பாக பந்துவீசுவதை சிரமமாக்கியது. மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினார் என்றார்.