
உலகக் கோப்பையின் 7-வது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5 முதல் நடைபெற்று வருகின்றன. ஹிமாசல் மாநிலம் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் இன்று இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
இதையும் படிக்க | ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி!
இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
வங்கதேச அணி ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திலும், இங்கிலாந்து அணி ஒரு தோல்வியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.