உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: இது எங்களுக்கு மோசமான உலகக் கோப்பை: வங்கதேச கேப்டன்
250 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் 350 (டெஸ்ட் 60 + ஒருநாள் 192 + டி20 98) விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 15 முறை 4 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் இரு முறை 5 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
இதையும் படிக்க: ஐசிசியின் கவனம் எங்கள் மீது திரும்ப வேண்டும்: நெதர்லாந்து வீரர்
ஒருநாள் போட்டிகளில் 5/27 என்பது சிறந்த பௌலிங்காக இருக்கிறது. இங்கிலாந்துக்காக 350 விக்கெட்டுகள் எடுத்த சுழல்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 3வது இடத்தினை பிடித்துள்ளார் ரஷித். இங்கிலாந்து பௌலர்களில் வேகம் மற்றும் ஸ்பின்னர் என அனைத்து வீரர்கள் பட்டியலில் 9வது இடத்தினையும் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணி 23.1 ஓவரில் 81/6 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.