உலகக் கோப்பை தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று விளையாடி வருகிறது. லக்னௌவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கேப்டனாக தனது 100வது போட்டியில் விளையாடும் தொடக்க வீரரான ரோஹித் சர்மா அரைசதமடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 18,000 ரன்களை கடந்துள்ளார். இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்:
மேலும் அத்துடன் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் (20) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்திய அணி 27 ஓவர் முடிவில் 116/3 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித்- 68*, கே.எல்.ராகுல்- 37*, விராட் கோலி-0, ஷுப்மன் கில்- 9.