வங்கதேசத்தை 204 ரன்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான் அரையிறுதியில் நுழையுமா?

உலகக் கோப்பையின் 31வது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
வங்கதேசத்தை 204 ரன்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான் அரையிறுதியில் நுழையுமா?
Updated on
1 min read


 
உலகக் கோப்பையின் 31வது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

உலகக் கோப்பையின் 31வது போட்டியில் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 45.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ்- 45, மஹமதுல்லா- 56, ஷகிப் அல் ஹாஷன்- 43 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 

முகமது வாசிம் ஜுனியர்
முகமது வாசிம் ஜுனியர்

பாகிஸ்தான் அணி சார்பாக ஷாஹீன் அஃப்ரிடி, முகமது வாசிம் ஜுனியர் தலா 3 விக்கெட்டுகளும் ஹாரிஸ் ரௌப் 2 விக்கெட்டுகளும் உஸாம மிர், இப்திகார் தலா 1 விக்கும் எடுத்து அசத்தினார்கள். 

205 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. மீதமிருக்கும் (இந்தப்போட்டியோடு சேர்த்து) 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது. 

பாகிஸ்தானுக்கு அடுத்தப் போட்டிகள்: நியூசிலாந்து, இங்கிலாந்து.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com