ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை வங்கதேசம் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இதையும் படிக்க | மைதானத்துக்கு பேட்டே கொண்டு வரவில்லை: கே.எல். ராகுல்
இந்திய அணியில் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக அக்ஷர் படேல் இடம்பெற்றுள்ளார். ஸ்ரேயாஸுக்கு பதிலாக நேற்று களமிறங்கிய ராகுலே இன்றும் விளையாடுகிறார்.
இந்திய அணி: ரோஹித், ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கே.எல். ராகுல், ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப், பும்ரா, மொஹமது சிராஜ்.
இலங்கை அணி எந்த மாற்றமும் இன்றி களமிறங்குகிறது.