இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
படம்: டிவிட்டர் | பிசிசிஐ
படம்: டிவிட்டர் | பிசிசிஐ

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை வங்கதேசம் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. 

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

 இந்திய அணியில் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக அக்‌ஷர் படேல் இடம்பெற்றுள்ளார். ஸ்ரேயாஸுக்கு பதிலாக நேற்று களமிறங்கிய ராகுலே இன்றும் விளையாடுகிறார்.

இந்திய அணி: ரோஹித், ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கே.எல். ராகுல், ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப், பும்ரா, மொஹமது சிராஜ். 

இலங்கை அணி எந்த மாற்றமும் இன்றி களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com