இந்திய அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் உள்பட 5 பேர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளிலும் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக அக்ஸர் படேல் அணியில் இடம்பெறமாட்டார் எனவும், ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பட்டியலில் முகமது ஷமி, ஷர்துல் தாக்குர் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் இணைந்துள்ளனர்.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் அஸ்வின் இருக்கிறாரா?: ரோஹித் பதில்
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 27) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் உள்பட 5 பேர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்திய வீரர்கள் பலருக்கு உடல்நிலை சரியில்லை. அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறமாட்டார்கள். வீரர்கள் பலர் அவர்களது சொந்த பிரச்னைகளுக்காக வீடு திரும்பியுள்ளனர். சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 13 வீரர்கள் மட்டுமே அணியில் இருக்கிறார்கள். ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷமி, ஷர்துல் மற்றும் பாண்டியா அவர்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். காயம் காரணமாக அக்ஸர் அணியில் இல்லை. அடுத்த சில வாரங்கள் இந்திய வீரர்கள் அனைவருக்கும் முக்கியமான காலக் கட்டம். அதனால் வீரர்கள் அவர்களது வீடுகளுக்கு சென்று உலகக் கோப்பைக்கு முன்னதாக புத்துணர்ச்சியுடன் உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மமதா பானர்ஜி தோல்வி! சுவேந்து அதிகாரி வெற்றி!

கேரளத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்! காங்கிரஸ் 28.79%

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.23! 39 காசுகள் சரிவு!

விஜய், தவெகவுக்கு ரஜினி வாழ்த்து!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


