நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முக்கிய வீரர்களின்றி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்தியா!

இந்திய அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் உள்பட 5 பேர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறவில்லை.

News image
Updated On :26 செப்டம்பர் 2023, 7:45 pm IST

இந்திய அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் உள்பட 5 பேர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளிலும் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக அக்ஸர் படேல் அணியில் இடம்பெறமாட்டார் எனவும், ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பட்டியலில் முகமது ஷமி, ஷர்துல் தாக்குர் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் இணைந்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 27) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் உள்பட 5 பேர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்திய வீரர்கள் பலருக்கு உடல்நிலை சரியில்லை. அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறமாட்டார்கள். வீரர்கள் பலர் அவர்களது சொந்த பிரச்னைகளுக்காக வீடு திரும்பியுள்ளனர். சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 13  வீரர்கள் மட்டுமே அணியில் இருக்கிறார்கள். ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷமி, ஷர்துல் மற்றும் பாண்டியா அவர்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். காயம் காரணமாக அக்ஸர் அணியில் இல்லை. அடுத்த சில வாரங்கள் இந்திய வீரர்கள் அனைவருக்கும் முக்கியமான காலக் கட்டம். அதனால் வீரர்கள் அவர்களது வீடுகளுக்கு சென்று உலகக் கோப்பைக்கு முன்னதாக புத்துணர்ச்சியுடன் உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.