மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

உலகக் கோப்பையில் அஸ்வின் இருக்கிறாரா?: ரோஹித் பதில் 

ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரவி அஸ்வின் இருக்கிறாரா என்ற கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். 

News image
Updated On :26 செப்டம்பர் 2023, 7:28 pm IST

ஐபிஎல் 2009இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முதலாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்திய அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் 2010இல் தேர்வானார். டெஸ்டில் 2011இல் களமிறங்கினார். 

சிஎஸ்கே அணியில் 6 ஆண்டுகள் இருந்த அஸ்வின் பல மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இந்திய அணியில் சிறந்த சுழல்பந்து வீச்சாளராக திகழ்கிறார். சிறந்த ஐசிசி பௌலர், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிரண்டு இடங்களை பிடித்து அசத்தியுள்ளார். 

21 மாதங்களுக்குப் பிறகு ஆஸி.க்கு எதிரான தொடரில் களமிறங்கி பௌலிங்கில் அசத்தினார் அஸ்வின். மேலும் பேட்டிங் கிடைக்காவிட்டாலும் போட்டி முடிந்தப்பிறகு நடு இரவிலும் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ரோஹித் சர்மா, “அஸ்வினின் அனுபவத்தினையும் அவரது ஸ்டைலினையும் நாம் புறக்கணிக்கவே முடியாது. ஆஸி. தொடரில் சிறப்பாக பந்து வீசினார்.  நன்றாக வேறுபடுத்தும் விதமாக பந்து வீசினார். மாற்று வீரராக அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு நிச்சயமாக உதவிகரமாக இருக்கும்” எனக் கூறினார். 

அக்.5ஆம் தேதி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் துவங்க இருக்கிறது. செப்.28 வீரர்களுக்கான மாற்று அறிவிப்பினை அனைத்து அணிகளும் இறுதி செய்யும் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.