உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

போதைப் பொருள் கடத்தல்! சௌதி அரேபியாவில் இந்தியருக்கு மரண தண்டனை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட இந்தியருக்கு சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம்.

News image

இந்தியருக்கு மரண தண்டனை - IANS

Updated On :4 ஆகஸ்ட் 2026, 10:13 am IST

சௌதி அரேபியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்தியருக்கு திங்களன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவுக்குள் மெத்தம்பெட்டமைன் கடத்திய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட இந்தியர் ஒருவருக்கு, உள்துறை அமைச்சகம் திங்களன்று மரண தண்டனையை நிறைவேற்றியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாணத்தின் தம்மாம் நகரில் லவ்லி ராணா என்ற இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவுக்குள், மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளைக் கடத்திய குற்றச்சாட்டின்கீழ், இந்தியாவைச் சேர்ந்த லவ்லி ராணா என்பவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ராணா மீதான குற்றத்தை உறுதிசெய்து தீர்ப்பளித்தது, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்து, பிறகு தீர்ப்பு இறுதியானது. இஸ்லாமிய சட்டப்படி தண்டனையை நிறைவேற்றுவதற்கான அரச ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

சௌதி அரேபியாவில், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

போதைப் பொருள்களால், சமூகத்துக்கு பெரும் அபாயம் ஏற்படும் என்பதால், அதனை ஒடுக்க உள்துறை அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எனவே, அந்நாட்டில் போதைப்பொருள்களைக் கடத்தவோ அல்லது விநியோகிக்கவோ முயற்சிக்கும் எவரும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனினும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மூளைச் சலவை செய்து பெரிய போதைப் பொருள் கும்பல்கள் அந்நாட்டுக்குள் போதைப் பொருள்களைக் கடத்திச் செல்கின்றன. பிடிபடும் நபர்கள், கடுமையான தண்டனைகளை அனுபவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.