எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:25 pm IST

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றுவதும் அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உமித் பெஹ்சாத் மற்றும் பூரியா சஃப்வத் என்கிற இருவர் ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு தளங்கள் தொடர்பான தகவல்களை இஸ்ரேலின் மொசாட் உளவாளிகளுக்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்டது பற்றியோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது பற்றியோ எதிலும் குறிப்பிடவில்லை. ஆனால், அவர்கள் இஸ்ரேலுக்கு ஒத்துழைத்து ரகசிய தகவல்களை அளித்ததாகக் குறிப்பிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் தரவுகளின்படி, சீனாவிற்கு அடுத்ததாக உலகில் அதிக மரணதண்டனைகளை நிறைவேற்றும் நாடாக ஈரான் உள்ளது.

ஈரானில் கடந்தாண்டு மட்டுமே 1,639 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1989-க்குப் பிறகு பதிவான அதிக எண்ணிக்கை இதுவாகும்.

சில நாள்களுக்கு முன்பு, அரசுக்கு எதிரான போராட்டத்தில் கடந்தாண்டு அதிகாரிகளை தீயிட்டு கொளுத்திய இருவருக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Two people sentenced to death in Iran for spying for Israel!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.