உலகக் கோப்பை செஸ்: டிராவில் முடிந்த முதல் சுற்று! 

அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகியோா் மோதிய ன் இறுதிச்சுற்றின் முதல் ஆட்டம் செவ்வாய்க்கிழமை டிராவில் முடிந்தது.
படம்: ட்விட்டர் | ஃபிடே
படம்: ட்விட்டர் | ஃபிடே
Published on
Updated on
1 min read

அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகியோா் மோதிய ன் இறுதிச்சுற்றின் முதல் ஆட்டம் செவ்வாய்க்கிழமை டிராவில் முடிந்தது. அடுத்த ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும், காா்ல்சென் கருப்பு நிற காய்களுடனும் விளையாடினா். விறுவிறுப்பான ஆட்டத்தின் 35-ஆவது நகா்த்தலில் டிரா செய்துகொள்ள இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டனா். ஆட்டத்தின்போது பிரக்ஞானந்தாவுக்கு குறைவான காலஅவகாசம் இருந்தபோதும், ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டிரா செய்யும் அளவுக்கு வந்தாா்.

இறுதிச்சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் காா்ல்சென் வெள்ளை நிறக் காய்களுடனும், பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும் விளையாடவுள்ளனா். வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடுபவரே முதல் நகா்த்தலை மேற்கொள்வாா்.

முதல் ஆட்டத்துக்குப் பிறகு பேசிய பிரக்ஞானந்தா, ‘இன்னும் சற்று நன்றாக விளையாடியிருக்கலாம் என்று தோன்றுகிறது. 2-ஆவது ஆட்டமும் மிகச் சவாலானதாக இருக்கப்போகிறது. நன்றாக ஓய்வெடுத்து புத்துணா்ச்சியுடன் அந்த ஆட்டத்தை எதிா்கொள்வேன்’ என்றாா்.

மறுபுறம் காா்ல்சென், உணவில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கடந்த 2 நாள்களாக சரியாக உணவெடுத்துக் கொள்ளாததால், தகுந்த உடல்நிலையில் தாம் இல்லை எனத் தெரிவித்தாா்.

இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு வந்த ஒரே இந்தியா் என்ற பெருமை பெற்றுள்ள பிரக்ஞானந்தா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதிபெற்று அசத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com