இது தொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றையப் போட்டிக்குப் பிறகு அவர் பேசியதாவது: உலகக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வி அனைவருக்கும் ஏமாற்றமளித்த நிலையில், இந்த டி20 தொடர் வெற்றி அனைவருக்கும் சிறிது மகிழ்ச்சியை கொடுக்கும் என நினைக்கிறேன். ஆட்டத்தை ரசித்து விளையாட வேண்டியது முக்கியம் என நினைக்கிறேன். அனைவரும் ஒவ்வொரு படிநிலையில் பொறுப்புகளை ஏற்று விளையாடுகின்றனர். டி20 தொடரில் வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனால், இந்த டி20 தொடரில் மீதம் ஒரு போட்டி இருக்கிறது. அச்சமின்றி விளையாட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம். உலகக் கோப்பை அணியில் இருந்த 2-3 வீரர்கள் அணியில் இருந்தது அணிக்கு பலம் சேர்த்தது.