நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனை!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2023, 11:52 am IST

வெள்ளிக்கிழமை நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று (டிச.1) நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்தியது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் நான்காவது ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. இது சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி பெறும் 136வது வெற்றியாகும்.

2006 முதல் தற்போது வரை 213 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 136 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது. 

இந்த வெற்றியின் மூலம் 226 ஆட்டங்களில் 135 வெற்றிகளைப் பெற்றுள்ள பாகிஸ்தானை தாண்டி இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 200 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 102 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 181 போட்டிகளில் விளையாடி 95 வெற்றிகளும் மற்றும் தென் ஆப்பிரிக்கா 171 போட்டிகளில் விளையாடி 95 வெற்றிகளும் பெற்று அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.