மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஆசியக் கோப்பை: இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது -பிசிசிஐ

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்காது என்ற நிலைப்பாட்டில் பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :4 பிப்ரவரி 2023, 9:53 am IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்காது என்ற நிலைப்பாட்டில் பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை தொடரை எங்கே நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய, பஹ்ரைனில் நடக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்திற்கு பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவருமான ஜெய் ஷா சென்றுள்ளார்.

ஆசியக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை தீர்மானிப்பதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நஜம் சேதி அழைத்ததன் பேரில் ஜெய் ஷா கலந்துகொண்டார். 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பொதுவான திடலில் நடத்த வேண்டும் என இந்தியா தரப்பில் கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அதற்கான விவாகரத்தில் கலந்தாலோசிக்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பஹ்ரைனுக்கு சென்றுள்ளார்.

எனினும் பாகிஸ்தானில் ஆசியக் கோப்பையை நடத்துவது இல்லை என்று பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.