2-வது டெஸ்ட்: தில்லிக்கு வந்த இந்திய, ஆஸி. வீரர்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் வெள்ளியன்று தொடங்குகிறது.
2-வது டெஸ்ட்: தில்லிக்கு வந்த இந்திய, ஆஸி. வீரர்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் வெள்ளியன்று தொடங்குகிறது. 2017-க்குப் பிறகு தில்லியில் டெஸ்ட் ஆட்டம் நடைபெறவுள்ளது. 

முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த ஆஸி. அணி, நேற்று தில்லிக்கு வந்தது. முதல் டெஸ்ட், இரண்டரை நாள்களில் முடிந்ததால் சில இந்திய வீரர்கள் தங்கள் வீட்டுக்குத் திரும்பி விட்டார்கள். இந்திய அணியினரின் ஒரு பகுதியினர் நேற்று தில்லிக்கு வந்தார்கள். சில வீரர்கள், உதய்பூரில் நடைபெற்ற பாண்டியாவின் திருமணத்தில் பங்கேற்றார்கள். 

காயம் காரணமாக முதல் டெஸ்டில் பங்கேற்காத நடுவரிசை பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர், 2-வது டெஸ்டில் விளையாடவுள்ளார். 

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. தற்போது, 4 டெஸ்டுகள் கொண்ட ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com