வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை முறியடித்த ஜோகோவிச்

டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நெ.1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஜோகோவிச்.

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 3:05 pm IST

டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நெ.1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஜோகோவிச்.

ஆடவா் ஒற்றையரில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியையும் வென்றார். கடந்த மார்ச் 2021-ல் நெ.1 வீரராக 310 வாரங்களுக்கு நீடித்த ஃபெடரரின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச். தற்போது, ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் 377 வாரங்களாக இருந்த ஸ்டெஃபி கிராஃபின் சாதனையையும் முறியடித்துள்ளார். இதன்மூலம் ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்த வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

2011-ல் 24 வயதில் முதல்முறையாக நெ.1 வீரராக ஆனார் ஜோகோவிச். ஜூலை 7, 2014 முதல் நவம்பர் 6, 2016 வரை தொடர்ச்சியாக நெ.1 வீரராக இருந்தார். தற்போது மேலும் மற்றொரு சாதனையைப் படைத்து தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார்.

தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நெ.1 இடம்

1. ஜோகோவிச் - 378 வாரங்கள்
2. கிராஃப் - 377 வாரங்கள்
3. நவரத்திலோவா - 332 வாரங்கள்
4. செரீனா வில்லியம்ஸ் - 319 வாரங்கள்
5. ஃபெடரர் - 310 வாரங்கள் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.