நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை முறியடித்த ஜோகோவிச்

டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நெ.1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஜோகோவிச்.

Published On :7 பிப்ரவரி 2024, 12:07 pm IST

டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நெ.1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஜோகோவிச்.

ஆடவா் ஒற்றையரில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியையும் வென்றார். கடந்த மார்ச் 2021-ல் நெ.1 வீரராக 310 வாரங்களுக்கு நீடித்த ஃபெடரரின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச். தற்போது, ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் 377 வாரங்களாக இருந்த ஸ்டெஃபி கிராஃபின் சாதனையையும் முறியடித்துள்ளார். இதன்மூலம் ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்த வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

2011-ல் 24 வயதில் முதல்முறையாக நெ.1 வீரராக ஆனார் ஜோகோவிச். ஜூலை 7, 2014 முதல் நவம்பர் 6, 2016 வரை தொடர்ச்சியாக நெ.1 வீரராக இருந்தார். தற்போது மேலும் மற்றொரு சாதனையைப் படைத்து தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார்.

தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நெ.1 இடம்

1. ஜோகோவிச் - 378 வாரங்கள்
2. கிராஃப் - 377 வாரங்கள்
3. நவரத்திலோவா - 332 வாரங்கள்
4. செரீனா வில்லியம்ஸ் - 319 வாரங்கள்
5. ஃபெடரர் - 310 வாரங்கள் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.