சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பிபிஎல் போட்டியிலிருந்து வெளியேறுவேன்: கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை மிரட்டும் ரஷித் கான்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய அணிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரபல வீரர் ரஷித் கான். 

News image
Updated On :13 ஜனவரி 2023, 12:00 pm IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய அணிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரபல வீரர் ரஷித் கான். 

மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருந்தன. ஆனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகிக் கொள்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நேற்று அறிவித்தது. 

இதையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் பிரபல வீரர் ரஷித் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

மார்ச் மாதம் விளையாடவிருந்த தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி விலகியிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. என் நாட்டுக்காக விளையாடுவதில் நான் பெருமை கொள்கிறேன். உலக அளவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நல்ல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு எங்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது அவ்வளவு சங்கடத்தை அளிப்பதாக இருந்தால் பிபிஎல் போட்டியில் நான் விளையாடுவதால் மற்றவர்களுக்கு ஏற்படும் சங்கடத்தையும் நான் விரும்பவில்லை. எனவே வருங்காலத்தில் பிபிஎல் போட்டியில் நான் விளையாடுவது குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ட்வீட்டில், கிரிக்கெட் தான் எங்கள் நாட்டின் ஒரே நம்பிக்கையாக உள்ளது. அரசியலைத் தள்ளி வையுங்கள் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ரஷித் கான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.