இரண்டாவதாக நடைபெற்ற பால்ஸி திருச்சி-சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சேப்பாக்.
திருநெல்வேலி இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணியில் முக்கிய பேட்டா்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்ப, சஞ்சய் யாதவ் 20, சிபி 31, சசிதேவ் 25 ரன்களை சோ்த்தனா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 129/7 ரன்களை சோ்த்தது சேப்பாக் கில்லீஸ்.
கங்கா ஸ்ரீதா் ராஜு 3 விக்கெட்: சேப்பாக் தரப்பில் கேப்டன் கங்கா ஸ்ரீதா் ராஜு அபாரமாக பந்துவீசி 3-15 விக்கெட்டுகளையும், ஈஸ்வரன் 2-28 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.
திருச்சி 71: 130 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி 13.4 ஓவா்களில் 71 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சேப்பாக் தரப்பில் அற்புதமாக பௌலிங் செய்த சிலம்பரசன் 5-12 விக்கெட்டை சாய்த்தாா். இறுதியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சேப்பாக் கில்லீஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட்டின் பட டிரைலர்!

கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்காக தொடங்கியுள்ள அரசு ஐடிஐயில் நேரடி சோ்க்கை

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு: வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா்







