நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டெஸ்டில் 11,000 ரன்களை கடந்த ஜோ ரூட்! 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 11 ஆயிரம் ரன்களை கடந்துள்ளர். 

News image
Updated On :3 ஜூன் 2023, 3:28 pm IST

130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 29 சதங்கள் 58 அரை சதங்கள் அடித்துள்ளார். 2021 ஜனவரி முதல் விளையாடிய 24 டெஸ்டுகளில் 11 சதங்களை எடுத்து அற்புதமாக விளையாடி வருகிறார். 

தற்போது அயர்லாந்து அணியுடன் இங்கிலாந்து ஒரேயொரு டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது.  முதல் இன்னிங்ஸில் ஆடிய அயர்லாந்து 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 524/4 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.  

இங்கிலாந்து அணியில் டக்கெட் 182 ரன்களும், ஒல்லி போப் 205 ரன்களும், ஜோ ரூட் 56 ரன்களும் எடுத்து அசத்தினர். ஜோ ரூட் இந்த அரை சதத்தின் மூலம் டெஸ்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். 

இங்கிலாந்து நாட்டில் அலைஸ்டர் குக்கிற்கு (12, 472) பிறகு அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்தவராக ஜோ ரூட் (11,004) திகழ்கிறார். மேலும் அதிவேகமாக 11000 ரன்களை கடந்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

இரண்டாம் நாள் முடிவில் அயர்லாந்து 97/3 ரன்கள் எடுத்துள்ளது. அயர்லாந்து அணி இங்கிலாந்தை விட 255 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.