39 வருடங்களுக்குப் பிறகு ஆஸி. அணி வீரர்கள் புதிய சாதனை! 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 3 கிரிக்கெட் வீரர்கள் ஐசிசி டெஸ்ட்  தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
லபுஷேன், ஸ்மித், டிராவிஸ் ஹெட்
லபுஷேன், ஸ்மித், டிராவிஸ் ஹெட்
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 3 கிரிக்கெட் வீரர்கள் ஐசிசி தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையை பெற்றது. 

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நன்றாக விளையாடியதால் ஸ்மித், ஹெட் தரவரிசையில் முன்னேறியுள்ளார்கள். மார்னஸ் லபுஷேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 

ஒரே அணியை சேர்ந்த மூன்று பேர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இதற்குமுன் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கோர்டன் கிரீனிக், கிளைவ் லாய்ட், லாரி கோம்ஸ் 1984 டிசம்பரில் முதல் மூன்றி இடங்களை பிடித்திருந்தனர். 39 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 

இந்தியாவின் சார்பாக ரிஷப் பந்த் 10வது இடத்தில் உள்ளார்

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை:

  1. மார்னஸ் லபுஷேன் - 903 புள்ளிகள்
  2. ஸ்டீவ் ஸ்மித் - 885 புள்ளிகள்
  3. டிராவிஸ் ஹெட்- 884 புள்ளிகள்
  4. கேன் வில்லியம்சன் - 883 புள்ளிகள் 
  5. பாபர் அசாம் - 862 புள்ளிகள் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com