தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

ஒருநாள் உலகக் கோப்பை: மற்றுமொரு நியூசிலாந்து வீரர் விலகல்! 

பிரபல நியூசிலாந்து வீரர் மைக்கெல் பிரேஸ்வெல் காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

News image

படம்: ட்விட்டர் | பிளாக்கேப்ஸ் | மைக்கெல் பிரேஸ்வெல்

Updated On :2 பிப்ரவரி 2024, 12:37 am IST

பிரபல நியூசிலாந்து வீரர் மைக்கெல் பிரேஸ்வெல் காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஏற்கனவே நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஐபிஎல் போட்டியின்போது காயம் ஏற்பட்டு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட முடியாமல் இருக்கிறார். தற்போது இவரை தொடர்ந்து 32 வயதான மைக்கெல் பிரேஸ்வெல் நியூசிலாந்திற்கு நல்ல ஆல்ரவுண்டர் ஆவார். 

அக்டோபர் மாதம் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 

19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 510 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 42.50 ஆகும். 2 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். பந்து வீச்சில் 15 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிகாக நன்றாக விளையாடியதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் டி20 பிளாஸ்ட் போட்டியில் பேட்டிங் ஆடும்போது பிரேஸ்வெல்லுக்கு வலது காலின் தசை நாரில் காயம் ஏற்பட்டது. இங்கிலாந்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. 6-8 மாதங்கள் ஓய்வு தேவைப்படுவதாக நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.