சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான்: தோனி உருக்கம்!

அகமதாபாத்தில் பெய்த மழையால் போட்டி ஒத்திவைக்கப்பட்டதில், அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :29 மே 2023, 3:05 pm

DIN

அகமதாபாத்தில் பெய்த மழையால் போட்டி ஒத்திவைக்கப்பட்டதில், அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நேற்று நடைபெறவிருந்த இப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

அதனையடுத்தி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி திடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையினா போட்டி டாஸ் போடப்பட்டது. 

இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அப்போது பேசிய தோனி, நேற்று உடைமாற்றும் அறையில் இருந்தோம். ஒரு கிரிக்கெட் வீரன் திடலில் இறங்கி விளையாடவே விரும்புவான். ஆனால் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான். அவர்கள் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.