மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சிஎஸ்கே அணிக்காக விளையாடியதால் இது சாத்தியமானது: ரவீந்திர ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக செயல்பட உதவியதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 அக்டோபர் 2023, 8:45 pm IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக செயல்பட உதவியதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்காக சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன் உள்பட 3 விக்கெட்டுகளை முக்கியமான தருணத்தில் அவர் கைப்பற்றினார்.

முக்கியமான தருணத்தில் விக்கெட்டுகள் எடுத்தது குறித்து ரவீந்திர ஜடேஜா கூறியதாவது: நான் சிஎஸ்கே அணிக்காக இந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில் விளையாடியுள்ளேன். அதனால் இந்த ஆடுகளத்தின் தன்மை குறித்து எனக்குத் தெரியும். இன்று எனக்கு 2-3 விக்கெட்டுகள் கிடைக்கும் என நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன. அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் ஸ்டம்புகளுக்கு பந்தை வீசினேன். பந்தில் நல்ல சுழல் இருந்தது. எந்த பந்து நேராக செல்லும், எந்த பந்து திரும்பும் என்பது உங்களுக்குத் தெரியாது. சென்னையில் போட்டி என்றாலே மைதானம் நிறைய ரசிகர்களைக் காண முடியும்  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.