கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உலகக் கோப்பையை ஐசிசி நடத்துகிறதா அல்லது பிசிசிஐ நடத்துகிறதா?: பாக். அணியின் இயக்குநர் கேள்வி! 

நேற்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பலரும் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். 

News image
Updated On :15 அக்டோபர் 2023, 6:43 am

DIN

உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்த்த இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதுவரை தொடர்ந்து 8-0 முறை பாகிஸ்தானை உலகக் கோப்பையில் வீழ்த்தியுள்ளது. 

இந்தப் போட்டி பல வகைகளிலும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன. அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிக மிக குறைவான டிக்கெட்டுகளே விற்பனை செய்யப்பட்டுள்ளது. விசா உள்ளிட்ட் பல பிரச்னைகள் இருந்ததாக தகவல்கள் வெளியானது. 

Story image

நேற்றையை போட்டியில் பாக். வீரர்கள் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது இந்திய ரசிகர்கள், “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷமிட்டது பலரையும் முகம் சுழிக்கவைத்துள்ளது. இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

போட்டி முடிந்தப்பிறகு பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் கூறியதாவது: 

பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் இந்தியாவுக்குதான் அதிகமான ஆதரவு இருந்தது. இது ஐசிசி நடத்தும் போட்டியாக இல்லை மாறாக பிசிசிஐ நடத்தும் இருதரப்பு கிரிக்கெட் போட்டி போல இருந்தது. 

Story image

ஒருமுறைக்கூட தில் தில் பாகிஸ்தான் என்ற வாசகம் ஒலிப் பெருக்கியில் ஒலிக்கவில்லை. இதுவும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தக் காரணத்துக்காக மட்டுமே பாகிஸ்தான் அணி தோற்கவில்லை. அதேவேளையில், இது நிச்சயமாக ஐசிசி நடத்தும் போட்டியாக இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும் இது குறித்து பேசி அபாரதம் பெற விரும்பவில்லை எனக் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.