உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்த்த இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதுவரை தொடர்ந்து 8-0 முறை பாகிஸ்தானை உலகக் கோப்பையில் வீழ்த்தியுள்ளது.
இந்தப் போட்டி பல வகைகளிலும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன. அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிக மிக குறைவான டிக்கெட்டுகளே விற்பனை செய்யப்பட்டுள்ளது. விசா உள்ளிட்ட் பல பிரச்னைகள் இருந்ததாக தகவல்கள் வெளியானது.
இதையும் படிக்க: சைகையால் சேதி சொன்ன விராட் கோலி: வைரலாகும் விடியோ!

நேற்றையை போட்டியில் பாக். வீரர்கள் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது இந்திய ரசிகர்கள், “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷமிட்டது பலரையும் முகம் சுழிக்கவைத்துள்ளது. இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Whole crowd singing #JaiSriRam against #INDvPAK #ICCCricketWorldCup23 pic.twitter.com/OX798R14Nh
â suresh jagadea (@JagadeaS) October 14, 2023
போட்டி முடிந்தப்பிறகு பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் கூறியதாவது:
இதையும் படிக்க: லியோவில் முற்றிலும் மாறுபட்ட விஜய்யை பார்க்கலாம்: லோகேஷ் கனகராஜ்
பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் இந்தியாவுக்குதான் அதிகமான ஆதரவு இருந்தது. இது ஐசிசி நடத்தும் போட்டியாக இல்லை மாறாக பிசிசிஐ நடத்தும் இருதரப்பு கிரிக்கெட் போட்டி போல இருந்தது.

ஒருமுறைக்கூட தில் தில் பாகிஸ்தான் என்ற வாசகம் ஒலிப் பெருக்கியில் ஒலிக்கவில்லை. இதுவும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தக் காரணத்துக்காக மட்டுமே பாகிஸ்தான் அணி தோற்கவில்லை. அதேவேளையில், இது நிச்சயமாக ஐசிசி நடத்தும் போட்டியாக இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும் இது குறித்து பேசி அபாரதம் பெற விரும்பவில்லை எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









