செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

உலகக் கோப்பையை ஐசிசி நடத்துகிறதா அல்லது பிசிசிஐ நடத்துகிறதா?: பாக். அணியின் இயக்குநர் கேள்வி! 

நேற்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பலரும் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். 

News image
Updated On :15 அக்டோபர் 2023, 12:13 pm IST

உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்த்த இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதுவரை தொடர்ந்து 8-0 முறை பாகிஸ்தானை உலகக் கோப்பையில் வீழ்த்தியுள்ளது. 

இந்தப் போட்டி பல வகைகளிலும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன. அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிக மிக குறைவான டிக்கெட்டுகளே விற்பனை செய்யப்பட்டுள்ளது. விசா உள்ளிட்ட் பல பிரச்னைகள் இருந்ததாக தகவல்கள் வெளியானது. 

Story image

நேற்றையை போட்டியில் பாக். வீரர்கள் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது இந்திய ரசிகர்கள், “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷமிட்டது பலரையும் முகம் சுழிக்கவைத்துள்ளது. இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

போட்டி முடிந்தப்பிறகு பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் கூறியதாவது: 

பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் இந்தியாவுக்குதான் அதிகமான ஆதரவு இருந்தது. இது ஐசிசி நடத்தும் போட்டியாக இல்லை மாறாக பிசிசிஐ நடத்தும் இருதரப்பு கிரிக்கெட் போட்டி போல இருந்தது. 

Story image

ஒருமுறைக்கூட தில் தில் பாகிஸ்தான் என்ற வாசகம் ஒலிப் பெருக்கியில் ஒலிக்கவில்லை. இதுவும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தக் காரணத்துக்காக மட்டுமே பாகிஸ்தான் அணி தோற்கவில்லை. அதேவேளையில், இது நிச்சயமாக ஐசிசி நடத்தும் போட்டியாக இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும் இது குறித்து பேசி அபாரதம் பெற விரும்பவில்லை எனக் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.